Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அம்மா சாபம் தான் விஜயகாந்த் இப்படி ஆனதற்கு காரணம்’ - அமைச்சர் அதிரடி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (15:15 IST)
சட்டசபையில் தேமுதிகவிற்கு இறங்கு முகம் என்று அம்மா சொன்னார். அது பலித்தது. விஜயகாந்துக்கு டெபாசிட் போனதற்கு காரணம் அம்மாதான் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
 

 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அம்மாவட்டத்தின் ஏழு தொகுதிகளுக்கான அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் கலந்துகொண்டார்.
 
அப்போது அவர் பேசுகையில், “சட்டசபையில் தேமுதிகவிற்கு இறங்கு முகம் என்று அம்மா சொன்னார். அது பலித்தது. விஜயகாந்துக்கு டெபாசிட் போனதற்கு காரணம் அம்மாதான். அப்போதே, திமுகவிற்கும் அம்மா சாபம் விட்டிருந்தால் திமுகவுக்கும் டெபாசிட் போயிருக்கும்.
 
விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்று விட்டோம், இனி நாங்கள்தான் என்று திமுகவினர் சொல்கிறார்கள். அதிமுக ஆளும் கட்சி என்பதை மறந்து விட்டு இப்படி பேசுகிறார்கள். திமுக எம்எல்ஏவால் ஒரு ரேசன் கார்டு வாங்கித் தர முடியுமா? முதியோர் பென்சன் வாங்கி கொடுக்க முடியுமா?” என்று கூறியுள்ளார்.
 
அப்படியென்றால், எதிர்கட்சி செய்ய நினைத்தாலும், ஆளுங்கட்சியினர் செய்யவிடமாட்டார்களா என்று கூட்டத்தின் இடையே சலசலப்பு எழுந்தது.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments