Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ளது அதிமுக ஆட்சி : விஜயகாந்த் குற்றச்சாட்டு

கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ளது அதிமுக ஆட்சி : விஜயகாந்த் குற்றச்சாட்டு
, செவ்வாய், 15 டிசம்பர் 2015 (21:13 IST)
தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்  கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாகியும் பல இடங்களில் மழை வெள்ளநீர் வடியாமல் இருக்கிறது. அந்த இடங்களில் கழிவு நீரும் சேர்ந்து கொசுக்கள்உற்பத்தியாகும் குட்டையாக மாறியுள்ளதாகவும், அதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கழிவுநீர் வடிவதற்கான நீர்வழிப்பாதைகள் இல்லை என்றும், அதனால் கழிவுநீர் அகற்றும் லாரிகள் மூலம் அந்த அசுத்த நீரை அகற்றவேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 
அதிமுக அரசிடமிருந்து தாங்கள் வேறு எவ்வித உதவியும் கேட்கவில்லை, இதை செய்துகொடுத்தாலே போதுமென்று மனம் நொந்துபோய் கூறுகின்றனர். எனவே அதிமுக அரசு நீண்ட நாட்களாக நீர் வடியாமல் உள்ள இடங்களிலிருந்து லாரிகள் மூலம் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
 
பொய்யும், புரட்டும் பேசி மக்களை ஏமாற்றாமல், போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். இன்னும் ஒருசில இடங்களில் மின்சார வசதி வழங்கப்படாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தி, மின்வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil