Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு விஜயகாந்த் பாராட்டு!

Webdunia
ஞாயிறு, 6 ஜூன் 2021 (13:47 IST)
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். பாஜக பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பிளஸ் டூ தேர்வை பாதுகாப்புடன் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் பிளஸ் டூ தேர்வை நடத்த அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் திடீர் திருப்பமாக பிளஸ் டூ தேர்வு ரத்து என்று அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுக கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற தமிழக அரசின் முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கொரோனா காலகட்டத்தில்,  மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், +2 தேர்வை ரத்து செய்து, தெளிவான முடிவு எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது’ என்று தனது டுவிட்டரில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments