தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மக்களுக்காக மக்கள் பணி என்ற வறுமை ஒழிப்பு திட்டம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட்ட உள்ளது.
இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து கேப்டன் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மக்களுக்காக மக்கள் பணி என்ற வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்கு நல உதவிகளும், 8 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் சுயதொழில் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு நல உதவிகளும் வழங்கப்படும்.
அதே போ, அக்டோபர் 9 ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்கள், சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெறும்.
இந்த பொதுக் கூட்டத்தில், தேமுதிக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.