Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை, தூத்துக்குடியில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (06:13 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மக்களுக்காக மக்கள் பணி என்ற வறுமை ஒழிப்பு திட்டம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட்ட உள்ளது.
 

 
இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தை  முன்வைத்து கேப்டன் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, மக்களுக்காக மக்கள் பணி என்ற வறுமை ஒழிப்பு திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இதற்காக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தூத்துக்குடியில் தொழிலாளர்களுக்கு நல உதவிகளும், 8 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில்  சுயதொழில் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு நல உதவிகளும் வழங்கப்படும்.
 
அதே போ, அக்டோபர் 9 ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் நல்லாசிரியர்  விருதுபெற்ற ஆசிரியர்கள், சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெறும்.
 
இந்த பொதுக் கூட்டத்தில், தேமுதிக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments