Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளுந்தூர்பேட்டையில் கோபமடைந்த விஜயகாந்த்: அடிச்சு தூக்குடா அந்த ஆளை

Webdunia
சனி, 14 மே 2016 (16:00 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். தான் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் தொண்டர் ஒருவரிடம் கோபப்பட்டார்.


 
 
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெற்றி பெறுவது சந்தேகம்தான், தோல்வியடைவார், இழுபறி, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவார் என ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளிவருகின்றன. இந்நிலையில் அதே தொகுதியில் அவர் கோபப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளை அடுத்து விஜயகாந்த் தான் போட்டியிடும் தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்நிலையில் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது தொண்டர் ஒருவர் கூச்சலிட்டது விஜயகாந்தை கோபப்படுத்தியது.

 

நன்றி: புதிய தலைமுறை
 
விஜயகாந்த் கோபப்பட்ட அப்புறம் என்ன அதிரடி தான். தொண்டர் கூச்சலிட்டதும், விஜயகாந்த் கையை நீட்டி அமைதியாக இருக்குமாறு கூறினார். ஆனால் அந்த தொண்டர் தொடர்ந்து கூச்சலிட கடுப்பகி போன விஜயகாந்த் அடிச்சு தூக்குடா அந்த ஆளை என்று கூறினார். எத்தனை தடவைதான் சொல்றது... கம்முன்னு இருக்கணும் என்னா? என்று கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments