Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களிடம் நாக்கை துருத்தி ஆவேசம் காட்டிய விஜயகாந்த் - வீடியோ

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2015 (16:32 IST)
திருவள்ளூர் மாவட்டம் ராமபுரம் அருகே வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை விஜயகாந்த் பார்வையிட சென்றபோது அவரை பார்த்த பொதுமக்கள் நெருங்க முயன்றுள்ளனர். அப்போது நாக்கை துருத்தி ஆவேசம் அடைந்து  அடிக்கப் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


 
 
திருவள்ளூர் மாவட்டம் ராமபுரம், போரூர் ஆகிய இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அப்பகுதிகளில் வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது பொதுமக்கள் அவரை கூட்டமாக நெருங்க முயன்றுள்ளனர்.

அப்போது ஒருவர் அவரை நெருங்க முயன்றபோது ஆவேசமடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கியபடி அவரை அடிக்கப் பாய்ந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், விஜயகாந்த் போன, பின்னர் அங்குயிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்கில் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு பண்ருட்டியில் தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தை விஜயகாந்த் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                                                                               
நன்றி: தந்தி டிவி

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments