Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மரணத்தில் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி: ஓ.பி.எஸ்.

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (18:53 IST)
ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம குறித்து அறிய நீதி விசாரணை கோரி, ஓ.பன்னிர்செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைப்பெறும் உண்ணாரவிரதம் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
ஜெயலலிதா மரணமடையும் தருவாயில் இருந்ததாக என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால் என்னிடம் கூறியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டுள்ளார். எனவே, அந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடருவேன். 
 
ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை நடந்தால் முதலில் நான்தான் விசாரிக்கப்படுவேன் என விஜயபாஸ்கர் கூறுகிறார். உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர்தான் இருப்பார், என்று கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments