Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட்டே வேண்டாம் என்றால் சொன்னால் ஆயூர்வேதம் , யுனானி அனைத்திலுமா ? - மாணவர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (16:16 IST)
ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா என அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வுகள் நடத்தப்படுமென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் நீட் எனும் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. இதனால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை.

கடந்த ஆண்டு நீட் தேர்வினால் மருத்துவப்படிப்பிற்கான சீட்டை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதையொட்டி தமிழகம் முழுவதும் நீட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாணவர்களின் கோரிக்கையை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் இப்போது ஆயுர்வேதம் , யுனானி மற்றும் சித்தா உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டுவர இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கே நீட் வேண்டாம் என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் மற்ற படிப்புகளுக்கும் நீட் என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments