Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள மின்விசிறிகளை கொடுத்த விஜய்வசந்த் எம்பி!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (15:35 IST)
கொரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் சொந்த பணத்தை கொடுத்த விஜய்வசந்த் எம்பி
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவ கட்டுபடுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. 
 
இந்தநிலையில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் ஆகியோர் தங்களது தொகுதி நிதியில் இருந்து பணத்தை ஒதுக்கி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார் அவர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும் தொகையை எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த பணத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் ஒன்றுக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான மின்விசிறிகளை விஜய்வசந்த் வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் கொரோனா பராமரிப்பு மையத்திற்கு சொந்த செலவில் 2.50 லட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் வழங்கினேன்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments