Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொழப்ப பார்ப்பதா வங்கிகள் முன் நிற்பதா: விஜய் சேதுபதி வேதனை!

பொழப்ப பார்ப்பதா வங்கிகள் முன் நிற்பதா: விஜய் சேதுபதி வேதனை!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (09:43 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் கால் கடுக்க நீண்ட நேரம் நிற்கின்றனர்.


 
 
கையில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பரவலாக பொதுமக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் விஜய் சேதுபதி இந்த 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து பேட்டியளித்தார்.

நன்றி: News7
 
இது குறித்து கூறிய அவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நகரப்புறங்களில் வசிப்பவர்களை விட கிராம மக்களே அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்றார். தினமும் வேலை செய்தால் தான் தங்கள் பொழப்பு என்ற நிலையில் உள்ளவர்கள் வேலைக்கு போவதா அல்லது இதை மாற்ற உட்காருவதா என கேள்வி எழுப்பினார்.
 
வங்கிகளின் முன் நிற்கும் கூட்டத்தை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கு என கூறிய அவர் இதெல்லாம் ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியா இருந்தால் சந்தோஷம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments