Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபசுரக்குடிநீரோடு களம் இறங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்! – மக்கள் ஆதரவு

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (13:05 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கபசுரக்குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒரு சில மருந்துகள் மட்டும் ஓரளவு பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் உள்ளிட்டவற்றை பருகி வருகின்றனர். சில தன்னார்வலர்கள் இந்த கபசுரக்குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள விஜய் சேதுபதி ரசிகர்கள் சாலைகளில் சுத்தம் செய்யும் பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments