Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
புதன், 30 ஏப்ரல் 2025 (11:09 IST)
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை அறிவிக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர், கேட்டுக் கொண்டார்.
 
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகளை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்று பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்தார். 
 
அதன்படி, கட்சியின் அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக சதீஷ், தலைமை நிலையச் செயலராக பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலராக அழகாபுரம் ஆ. மோகன்ராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, கடந்த ஆண்டின் மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், வெறும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments