Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி செய்து விட்டாளே பாவி! - அபிராமியின் கணவர் விஜய் கதறல்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (16:12 IST)
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.  

 
சுந்தரம், அபிராமி இருவரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபிராமி தொடர்புடைய பல விவகாரங்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. 
 
மரணமடைந்த தனது இரு குழந்தைகளையும் அடக்கம் செய்த போது இரு குழந்தைகளையும் கட்டி அணைத்துக்கொண்டு அபிராமியின் கணவர் விஜய் கதறி அழுதது அங்கிருந்த அவரின் உறவினர்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. 
 
குழந்தைகளை அடிக்க கூட மாட்டேளே. ஆனால் கொலை செய்து விட்டாளே! எட்டு வருட காதல் வாழ்கை பறிபோனது பற்றி கூட எனக்கு கவலையில்லை. என் குழந்தைகளை இல்லாமல் செய்து விட்டாளே.  அவர்களுக்கு விஷம் கொடுக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது? படுக்கை அறை சென்று பார்த்திருந்தால் ஒரு குழந்தையாவது காப்பாற்றி இருப்பேனே! என அவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments