Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை இல்லாமல் என் எதிர்காலம் என்னவாகுமோ? : விஜய் ஆண்டனி உருக்கம்

அண்ணாமலை இல்லாமல் என் எதிர்காலம் என்னவாகுமோ? : விஜய் ஆண்டனி உருக்கம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (15:10 IST)
தமிழ் சினிமா பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் மரணமடைந்து துக்கம் கூட இன்னும் விளகாத நிலையில் மற்றொரு இளம் பாடலாசிரியர் அண்ணாமலை(வயது 49) இன்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.


 

 
விகடன் குழுமத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றிய அவர், பின்பு பாடலாசிரியராக திரையுலகில் அடியெடுத்துவைத்தார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல் மூலம் பிரபலாமானார். 
 
இதுவரை சுமார் 100 பாடல்கள் வரை எழுதியுள்ள அவர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் அதிக பாடல்களை எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் அவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் “என் அருமை நண்பரும் பாடலாசிரியருமான அண்ணாமலை இன்று மரணம் அடைந்து விட்டார். அவர் இல்லாத என் எதிர்காலத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments