Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (08:59 IST)
கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறையினர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் அவ்வப்போது தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்து வருவது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை அண்ணா நகரில் உள்ள டி.எஸ்.பி. முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்தபோது லஞ்சம் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

டிஸ்பி முத்தழகுடன் பெண் ஒருவர் லஞ்ச பேரம் குறித்து பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் செய்திகள் வெளியானது. இந்த வாட்ஸ்அப் ஆடியோ வைரலாகியதை அடுத்து டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்று லஞ்ச ஒழிப்பு அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments