Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி கார் உடைப்பு! – அழைப்பிதழில் பெயர் போடாததால் வன்முறை!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (10:56 IST)
கோவையில் அழைப்பிதழில் பெயர் போடாத விவகாரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகியின் கார் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக ராமகிருஷ்ணன் என்பவர் உள்ளார். அமைப்பு சார்பில் நோட்டீஸ் அடிக்கும்போது அதில் சிலரது பெயரை ராமகிருஷ்ணன் அச்சடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது சொந்த அமைப்பினர் சிலர் அவரது வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர் வீட்டின் முன்பிருந்த காரை அமைப்பினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments