Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்.. காத்திருக்குது மிக பலத்த மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
புதன், 11 டிசம்பர் 2024 (13:26 IST)

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் தமிழகத்தில் மெல்ல மழைப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதலே சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

 

இதனால் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு வரை மிக பலத்த மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த கனமழை பெய்ய உள்ளது. இதனால் மழையை கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments