Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக் கழிவறையில் தீக்குளித்துத் தற்கொலை

6 ஆம் வகுப்பு மாணவி பள்ளிக் கழிவறையில் தீக்குளித்துத் தற்கொலை
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (15:10 IST)
வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக் கழிவறையில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

பேரணாம்பட்டு பாகர் உசேன் வீதியை சேர்ந்த கண்ணபிரான் என்பவரின் மகள் ஹரிணி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பள்ளி கழிவறை பகுதியில் மாணவி ஹரிணி உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ஆசிரியார்கள் மாணவியை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவி ஹரிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த பேரணாம்பட்டு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவியின் தாய் இறந்து விட்டதாகவும், இதனால் இவரது தந்தை கண்ணபிரான் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் மாணவி ஹரிணி கூல்டிரிங்ஸ் பாட்டிலில் மண்ணெண்ணை எடுத்து வந்து பள்ளிக் கழிவறையில் தீக்குளித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil