Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாங்கண்ணி உத்திரிய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:14 IST)
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆலயம் அமைந்துள்ளது.
 
கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற இந்த பேராலயத்தில் மும்பை, வசாய் பகுதி கொங்கினி மீனவர்களால்  கொண்டாடப்படும் உத்திரிய மாதா ஆண்டுப்பெருவிழா அதி விமர்சையாக தொடங்கியது.
 
வேளாங்கண்ணி பேராலய ஆலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்புத் திருப்பலி செய்தார். 
 
தொடர்ந்து பேராலய வளாகத்திலிருந்து துவங்கிய கொடி ஊர்வலம் கடற்கரை சாலை வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.
 
அதனைத் தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார். வான வேடிக்கைகள் முழங்க மாதா உருவம் பொறித்த புனித கொடி பேராலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
 
விழாவில் மும்பை வசாய் பகுதி கொங்கனி மீனவர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
 
முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும்15ஆம் தேதி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments