Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேல் யாத்திரைக்காக மேடை அமைக்க முயற்சி: பாஜகவினர் - போலீசார் இடையே வாக்குவாதம்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (18:45 IST)
நாளை பாஜகவினர் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த யாத்திரைக்காக மேடை அமைக்க முயற்சி செய்யப்பட்டதை அடுத்து திருத்தணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த பாஜகவினர் திட்டமிட்டனர். இந்த யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாத்திரை தொடங்கும் இடமான திருத்தணியில் வேல் யாத்திரைக்கான மேடைகளை அமைக்க பாஜகவினர் முயன்றனர் 
 
அப்போது அங்கு வந்த போலீசார் பாஜகவினரை தடுத்து நிறுத்திய நிலையில் பாஜகவினர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பாஜகவினரை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments