Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? விஜயகுமார் அதிரடி தகவல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (15:41 IST)
சந்தனமர கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? என்று ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை விஜயகுமார் எழுதி வருகிறார்.


 

 
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களையும் அச்சுறுத்துய,  சந்தனமர கடத்தல் என்ற அடைமொழி கொண்ட வீரப்பன், சுமார் 20 ஆண்டுகள் வன பகுதியில் இருந்து கொண்டே தமிழ்நாடு அரசை ஆட்டி படைத்தவர். 
 
கடத்தல் மன்னன் என்று பெயர் எடுத்த வீரப்பன் மீது 180 பேரை கொலை செய்ததாகவும், கோடி கணக்கில் யானை தந்தங்களை கடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையில் தனி அதிரடிப்படை அமைக்கப்பட்டு வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
 
வீரப்பனை பிடிக்க அதிரடி படையினர் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். காவல்துறை பிரிவில் இருந்து ஒருவர் வீரப்பன் அணியில் சேர்ந்து, அவருடன் பழகி பின்னர் வீரப்பனை காட்டை விட்டு வெளியே வரச்செய்து சுட்டு வீழ்த்தினர்.
 
இத்தகவலை விஜயகுமார் தெளிவாகவும், விரிவாகவும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுதி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சந்தனமர கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டது பற்றி சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன், இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக சிலரது பெயர்களை தவிர்த்துள்ளேன், என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments