Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்தா புயல்: அய்யய்யோ ஜெயலலிதா சமாதி என்ன ஆச்சு!

வர்தா புயல்: அய்யய்யோ ஜெயலலிதா சமாதி என்ன ஆச்சு!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (13:11 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அடுத்த நாள் மாலையே அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்கள். அன்றே அவருக்கு மேற்கூறையுடன் சமாதி வைக்கப்பட்டது. இதனை தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.


 
 
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் ஜெயலலிதாவுக்கும் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஜெயலலிதா சமாதிக்கு மேற்கூறை அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையை அதிதீவிர வர்தா புயல் தாக்கியது. இதில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் தூக்கி வீசப்பட்டன. பல வருடங்களாக கம்பீரமாக நின்ற மரங்கள் கூட வேரோடு சாய்ந்து வர்தா புயலுக்கு இறையாகின.
 
ரயில் நிலைய கூரைகள் கடைகள் நிலைகுலைந்து தூக்கி வீசப்பட்டன. இதனையடுத்து மேற்கூறையுடன் கூடிய ஜெயலலிதா சமாதிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. ஆனால் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு ஒன்றும் ஆகவில்லை.
 
ஜெயலலிதாவை போல அவரது சமாதிக்கு போடப்பட்டுள்ள மேற்கூறையும் கம்பீரமாக நிற்கிறது. பாதுகாப்பு காவலர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குள் தண்ணீர் புகாதபடி சுற்றிலும் மணல் மூட்டைகளை தடையாக வைத்துள்ளனர்.

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments