Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஏஓ தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

விஏஓ தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
, புதன், 16 டிசம்பர் 2015 (21:51 IST)
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில், கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான 813 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு  பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற இருந்த விஏஓ தேர்வு பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் மழை மற்றும் வெள்ளசேதம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil