Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்: வன்னியரசு கோரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (09:42 IST)
ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் வன்னியரசு கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பணம் கைமாறி உள்ளது. இந்த விவகாரத்தில் அண்ணாமலையை கைது செய்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பேரணியை நடத்த விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments