Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைது - வாணி ராணி ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (10:58 IST)
இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் சீரியல் நடிகை சங்கீதா கைது செய்யப்பட்ட விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சில சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து வரும் நடிகை சங்கீதா அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு உதவியாக செயல்பட்ட சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார். 
 
கைது செய்யப்பட்ட நடிகை சங்கீதா வாணி ராணி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சின்னத்திரையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments