Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்கவாதம் ஏற்பட்ட அரியவகை வெள்ளைப்புலி மரணம்! – சோகத்தில் வண்டலூர் பூங்கா!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:42 IST)
வண்டலூர் பூங்காவில் இருந்த அரிதான வெள்ளைப்புலி பக்கவாதத்தால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மான், சிங்கம், மயில், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் மூலம் விலங்குகளை பராமரிப்பதற்கான செலவுகளை வண்டலூர் பூங்கா நிர்வகித்து வருகிறது.

வண்டலூரில் அரியவகை வெள்ளை புலிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ஆகன்ஷா என்னும் 13 வயதுடைய பெண் வெள்ளைப்புலியும் பராமரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் ஆகன்ஷாவுக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளைப்புலி இறந்துள்ளது. அரியவகை வெள்ளைப்புலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments