Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:57 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600க்குள் குறைந்து விட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்படும் என்று அறிவித்தது 
 
இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டது. ஆனால் முறையான அறிவிப்பு வராததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மட்டும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து இணை இயக்குனர் காஞ்சனா அவர்கள் கூறியபோது கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பார்வையாளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments