வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:57 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600க்குள் குறைந்து விட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்படும் என்று அறிவித்தது 
 
இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டது. ஆனால் முறையான அறிவிப்பு வராததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மட்டும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து இணை இயக்குனர் காஞ்சனா அவர்கள் கூறியபோது கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பார்வையாளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments