Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கும் கூட மொழி திணிப்பு பிடிக்காது! – ரூட்டை மாற்றிய வானதி சீனிவாசன்!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (12:45 IST)
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பிற்கு எதிரான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ள நிலையில் மொழி திணிப்பை பாஜகவும் ஆதரிக்காது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் திரைப்பிரபலங்கள் இந்திக்கு எதிரான வாசகங்களை அடங்கிய டீசர்ட்டுகளை அணிந்து புகைப்படம் பதிவிட்டதால் சமூக வலைதளங்களில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது.

திரைத்துறையினரின் இந்த ட்ரெண்டிங் குறித்து பேசியுள்ள பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ”மொழி திணிப்பை எப்போதும் பாஜக ஆதரித்தது கிடையாது. கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்வதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments