சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் பேச வேண்டும்: முதல்வர் அறிக்கைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (16:52 IST)
சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் பேச வேண்டும் என்று திருவாரூர்  திருவிக அரசு கல்லூரி முதல்வர் ராஜா ராமன் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்ததற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சனாதன எதிர்ப்பு கருத்துக்களை வரும் 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும் என்று  திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 
 
இந்த சுற்றறிக்கை குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களிடையே திமுக நஞ்சை விதைக்கிறது என்றும் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிராக இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments