Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரும் எதிர்விளைவு: வைரமுத்து எச்சரிக்கை..!

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (09:12 IST)
உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய எதிர் விளைவு குறித்த தகவலை கவியரசு வைரமுத்து தனவே சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. முதல் கட்டமாக சேவை துறையில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோன நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் உற்பத்தி துறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு என்பதே மிக குறைவாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து கவிதை வடிவில் கவியரசு வைரமுத்து கூறியிருப்பதாவது:

ஓர் எச்சரிக்கை

உலகம் இருபெரும்
துறைகளால் இயங்குகிறது

ஒன்று உற்பத்தித்துறை
இன்னொன்று சேவைத்துறை

சேவைத்துறையில் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்யத்
தொடங்கிவிட்டன ரோபோக்கள்

சில ஆண்டுகளில்
முற்றிலும் பரவிவிடக்கூடும்

உற்பத்தித் துறையிலும்
ரோபோக்கள் ஆதிக்கம் பெற்றுவிடில்
உலகம் சந்திக்கப் போகும்
மிகப்பெரும் எதிர்விளைவு
வேலையில்லாத் திண்டாட்டம்

எண்ணூறு கோடி
மக்கள்தொகை கொண்ட உலகு
என்ன செய்யும்?

அறிவுலகம் ஆட்சி உலகம்
இரண்டும் சந்திக்க வேண்டிய
'காலப்பேரிடர்' இது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments