‘தண்ணீர் தண்ணீர், எங்கணும் தண்ணீர், குடிக்கத்தான் இல்லை ஒரு துளி': வெள்ளம் குறித்து வைரமுத்து

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (18:42 IST)
சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் குறித்து  கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் தனது சமூக வலைத்தளத்தில் செய்த  பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் இது குறித்து கூறி இருப்பதாவது


‘தண்ணீர் தண்ணீர்
எங்கணும் தண்ணீர்
குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'
எனும் ஆங்கிலக் கவிதை
நினைவின் இடுக்கில் கசிகிறது

வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர்
என்பது பெருந்துயரம்

விடியும் வடியும் என்று
காத்திருந்த
பெருமக்களின் துயரத்தில்
பாதிக்கப்படாத நானும்
பங்கேற்கிறேன்

என் கடமையின் அடையாளமாக
முதலமைச்சரின்
பொது நிவாரண நிதிக்கு
ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

பொருள்கொண்டோர்
அருள்கூர்க

சக மனிதனின் துயரம்
நம் துயரம்

இடர் தொடராதிருக்க
இனியொரு விதிசெய்வோம்;
அதை எந்தநாளும் காப்போம்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு மைதானத்தில் நடந்த 'ஆபரேஷன் சிந்துர்.. இந்திய அணி வெற்றிக்கு மோடி வாழ்த்து..!

கரூர் துயரம்.. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன?

கரூர் துயர சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்புக் குழு விசாரணை

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

அடுத்த கட்டுரையில்
Show comments