Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் சந்திப்பை தவிர்த்த வைகோ, திருமாவளவன்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (12:46 IST)
கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கருணாநிதியுடனான சந்திப்பை மக்கள் நல கூட்டியக்கத்தில் உள்ள வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் தவிர்த்துள்ளனர்.
 
நேற்று மலை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பவள விழா நிறைவு விழாவில் கவிக்கோ கருவூலம் என்ற புத்தகத்தை திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டார், முன்னதாகா இந்த அப்துல் ரகுமானுக்கு வாழ்த்துரை வழங்கும் நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமை தாங்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன், தமாகா துணை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
 
கவிக்கோ அப்துல் ராகுமானுக்கு வாழ்த்துரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி காமராஜர் அரங்க மேடையின் பின் பக்கம் வழியாக காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கி மேடையை நோக்கி வருவதற்கு தயாராக இருந்தார், அப்போது கருணாநிதியுடனான சந்திப்பை தவிர்க்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன் பக்கம் வழியாக மேடையில் இருந்து இறங்கி சென்று விட்டார். இதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், கருணாநிதி வருகைக்கு முன்பாக பேசிவிட்டு சென்றுவிட்டார். இதனால் கருணாநிதி, வைகோ, திருமாவளவன் சந்திப்பு தவிர்க்கப்பட்டது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments