Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக, அதிமுக கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்தது: வைகோ

Webdunia
புதன், 11 மே 2016 (11:37 IST)
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்தது என்று மதிமுக தலைவரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.


 

கோவை பீளமேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்த பணம். அந்த பணத்தை நாம் வாங்கினால் பாவம்தான் சேரும். தமிழக மக்களிடம் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் நலக்கூட்டணியை ஏற்படுத்தினோம். தற்போது விஜயகாந்த் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். எங்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு மாற்றாக எங்கள் கூட்டணி இருப்பதால் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நம்பியவர்களுக்கு உயிர்கொடுப்பவன்தான் இந்த வைகோ என்று கூறினார்.

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments