Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுபிரியா மரணம் பற்றிய சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராது: வைகோ

விஷ்ணுபிரியா மரணம் பற்றிய சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராது: வைகோ
, புதன், 23 செப்டம்பர் 2015 (12:17 IST)
விஷ்ணுபிரியா மரணம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியபோது,

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா மரணம் கொலையா? தற்கொலையா? என்பது பற்றி அறிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விஷ்ணுபிரியா மரணம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் எந்த உண்மையும் வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற ராஜபக்சேவை இலங்கை அமைச்சர் பாராட்டி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil