Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவுக்குப் பதில் அவர் மகன் – மதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் !

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:44 IST)
மதிமுக மாநாட்டில் பேனர் வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் வைகோவின் மகன் துரை வையாபுரி.

மதிமுக சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பிதாமகன் அறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக தி நகர் மற்றும் சென்னையின் இதரப் பகுதிகளில்  பேனர்கள் வைக்கப்பட்டன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது மதிமுகவினருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மதிமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்கு சென்ற வைகோவின் மகன் துரை வையாபுரி குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். வைகோ ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளதால் அவர் சார்பாக வைகோ சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் வைகோவின் மகனுக்குக் கட்சியில் பதவி கொடுப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்வுகளில் அவர் முன்னிறுத்தப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments