Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் பிடிக்காது, ஆனால் அப்பாவுக்காக வருகிறேன்: வைகோ மகன்

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (06:32 IST)
அரசியல் பிடிக்காது, ஆனால் அப்பாவுக்காக வருகிறேன்: வைகோ மகன்
அரசியல் பிடிக்காது ஆனால் அப்பாவுக்காக வருகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்பட பல கட்சிகளில் வாரிசு அரசியல் சர்வசாதாரண இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மதிமுகவில் வாரிசு அரசியல் வர தொடங்கிவிட்டது
 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தொழில் அதிபராக இருந்து வரும் நிலையில் தற்போது அவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற விரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’அப்பாவுக்கு வயதாகி விட்டதால் அவருக்கு ஆதரவாக அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும், பிடிக்காத அரசியலையும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் 
 
விரைவில் மதிமுக பொதுச் செயலாளராக துரை வையாபுரி பதவி ஏற்பார் என்றும் அவரது கட்டுப்பாட்டில் மதிமுக வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இளைஞரின் கையில் மதிமுக வந்தால், அந்த கட்சி கட்சிக்கு முன்னேற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments