கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு மனு: முதல் கையெழுத்து போட்ட வைகோ!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (17:31 IST)
தமிழக கவர்னரை திரும்பப்பெற திமுக கூட்டணி மனு தயாரித்து வரும் நிலையில் அந்த மனுவில் முதல் கையெழுத்தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழக கவர்னர் பதவியை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மனுவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட திமுக எம் பி டி ஆர் பாலு அழைப்பு விடுத்துள்ளார் 
 
இந்த அழைப்பை ஏற்று முதல் நபராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்று மனுவில் கையெழுத்திட்டார். அவர் கூறியபோது கவர்னர் என்பவர் ஜனநாயகம் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவியாக அவர் இருக்க வேண்டும் என்றும் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் அதற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று தெரிவித்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments