Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதிக்கு மனு: முதல் கையெழுத்து போட்ட வைகோ!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (17:31 IST)
தமிழக கவர்னரை திரும்பப்பெற திமுக கூட்டணி மனு தயாரித்து வரும் நிலையில் அந்த மனுவில் முதல் கையெழுத்தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழக கவர்னர் பதவியை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மனுவில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட திமுக எம் பி டி ஆர் பாலு அழைப்பு விடுத்துள்ளார் 
 
இந்த அழைப்பை ஏற்று முதல் நபராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்று மனுவில் கையெழுத்திட்டார். அவர் கூறியபோது கவர்னர் என்பவர் ஜனநாயகம் மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உதவியாக அவர் இருக்க வேண்டும் என்றும் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கவர்னர் அதற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று தெரிவித்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments