Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் மாதிரி வேணாம், அண்ணா மாதிரி வாங்க’: வைகோவிடம் தொண்டர்கள் வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (07:30 IST)
திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெற்று வந்துள்ள வைகோவிடம் அவரது தொண்டர்கள் அந்த ஒரு தொகுதியில் வைகோவே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்களாம்
 
ஆனால் தனக்கு தேர்தல் அரசியலில் விருப்பம் இல்லை என்றும் பெரியார் போன்று தேர்தலில் போட்டியிடாமல் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் வைகோ பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நீங்க பெரியார் மாதிரி வேணாம், அண்ணா மாதிரி வாங்க என்று கோஷமிட்டதாகவும், தொண்டர்களின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொள்வதாகவும் வைகோ கூறியுள்ளார்.
 
எனவே திமுக கொடுத்த  அந்த ஒரு தொகுதியில் வைகோவே போட்டியிடுவார் என்றும், ஒருவேளை அதில் தோல்வி அடைந்தால் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்றும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே பாராளுமன்றத்தில் வரும் ஐந்து ஆண்டுகள் வைகோவின் குரல் ஒலிக்க போவது உறுதி என மதிமுக வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments