Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிமலையில் உட்கார்ந்து மகுடி வாசிக்கும் மோடி! – வைகோ ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:17 IST)
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வைகோ “பிரதமர் மோடி எரிமலை விளிம்பில் அமர்ந்து மகுடி வாசித்து கொண்டிருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்து ஆவணங்களை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments