எரிமலையில் உட்கார்ந்து மகுடி வாசிக்கும் மோடி! – வைகோ ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (10:17 IST)
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வைகோ “பிரதமர் மோடி எரிமலை விளிம்பில் அமர்ந்து மகுடி வாசித்து கொண்டிருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்து ஆவணங்களை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி

இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கான வாய்ப்பு?

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments