Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு

தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (05:12 IST)
கோவில்பட்டியில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நலகூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இதற்கா ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று வைகோ தனது ஆதரவாளர்களுடன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, தேவர் சிலைக்கு மாலை போட வைகோ முயன்ற போது பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து, தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். மேலும், மாற்று வேட்பாளரான விநாயகா ஜி.ரமேஷ் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
 
மனு தாக்கலுக்கு பின்பு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரசார வேனில் நின்றபடி செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார்.
 
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி, தேர்தல் பறக்கும் படை அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான வேலுமயில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வைகோ மீது போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments