Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு

தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (05:12 IST)
கோவில்பட்டியில் தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நலகூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இதற்கா ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று வைகோ தனது ஆதரவாளர்களுடன் மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, தேவர் சிலைக்கு மாலை போட வைகோ முயன்ற போது பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து, தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். மேலும், மாற்று வேட்பாளரான விநாயகா ஜி.ரமேஷ் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
 
மனு தாக்கலுக்கு பின்பு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரசார வேனில் நின்றபடி செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார்.
 
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி, தேர்தல் பறக்கும் படை அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான வேலுமயில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வைகோ மீது போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி...!

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

சீமான் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்! அழைத்த நயினார்! - சீமான் முடிவு என்ன?

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தன்னை தானே கழுத்தறுத்து கொண்ட வாலிபர்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments