Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லா இருக்க தமிழகத்தை பிரிக்க நினைக்க வேண்டாம்! – முதல்வரை சந்தித்த வடிவேலு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:39 IST)
நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில் தமிழகத்தை பிரிக்க நினைக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு ரூ.5 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழகத்தில் உலகமே வியக்கும் அளவிற்கான நல்லாட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார். கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார். மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டு தங்களது சந்ததிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நன்றாக உள்ள தமிழகத்தை பிரிக்கும் நோக்கில் யாரும் பேச வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments