Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா!

தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா!
, புதன், 14 ஏப்ரல் 2021 (07:57 IST)
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருக்கும் ஆர்வம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது பிரதமர் மோடியின் ஆலோசனைப் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. வழக்கமாக தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பிக்கைகளுக்கு விதை போடும் நன்னாள்: கமல்ஹாசனின் புத்தாண்டு டுவிட்