Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளுக்கு 144 தடை உத்தரவு; பிரபல யூட்யூபர் கைது! – உ.பியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (09:48 IST)
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடியபோது கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் பிரபலமான யூட்யூபராக இருப்பவர் கவுரவ் தனேஜா. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிறந்தநாளை உத்தர பிரதேச மெட்ரோ ரயில் நிலையத்தில் கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டோக்கனும் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியால் மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததுடன், பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

அதிக நெருக்கடி ஏற்பட்டதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக கவுரவ் தனோஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments