Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரி சீட்டுக்கு ரூ.3500 கோடி பரிசு; தலைமறைவான அதிர்ஷ்டசாலி! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (12:48 IST)
அமெரிக்காவில் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.3500 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த நபர் தலைமறைவாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படும் நிலையில் மக்களுக்கு லாட்டரி மீது மோகமும் தொடர்ந்து வருகிறது. அதிர்ஷ்டமாக சிலருக்கு திடீரென பெரும் தொகை லாட்டரியில் கிடைக்கும் சம்பவங்களும் நடக்கும். அப்படியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபொர்னியா பகுதியில் விற்கப்பட்ட லாட்டரி ஒன்றிற்கு ரூபாய் மதிப்பில் 3,500 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த லாட்டரி சீட்டை வாங்கிய நபர் யார் என்று தெரியவில்லை. அவர் லாட்டரி அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளவில்லை. பரிசு விழுந்தவர் அந்த தொகையை பெற்றுக் கொள்ள ஒரு வருட காலம் அவகாசம் உள்ளதாக லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையில் 40 சதவீதம், அதாவது சுமார் 1,400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும் என லாட்டரித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments