Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்ப்புக்கு மாறான ஜெயலலிதா தீர்ப்பு: தமிழிசை கருத்து!

Webdunia
திங்கள், 11 மே 2015 (19:50 IST)
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இன்று காலை, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இதனையொட்டி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது.
 
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
 
எனவே, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் செயல்பாடு புதிதாக திட்டமிடப்படும்" என்றார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments