Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்பார்ப்புக்கு மாறான ஜெயலலிதா தீர்ப்பு: தமிழிசை கருத்து!

எதிர்பார்ப்புக்கு மாறான ஜெயலலிதா தீர்ப்பு: தமிழிசை கருத்து!
, திங்கள், 11 மே 2015 (19:50 IST)
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இன்று காலை, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இதனையொட்டி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, "சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது.
 
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
 
எனவே, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் செயல்பாடு புதிதாக திட்டமிடப்படும்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil