Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில எந்தெந்த ஏரியாவில் எவ்ளோ லெவல்ல தண்ணி இருக்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (12:03 IST)
சென்னையின் முக்கிய அகுதியில் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவிற்கு உள்ளது என தெரிந்துக்கொள்ளுங்கள். 
சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 7 ஆண்டுகளில் கடுமையாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீரை பொருத்தவரை கடந்த 7 ஆண்டுகளில் முன்பு இருந்த நிலத்தடி நீர் மட்டம் இப்போது பெரிய அளவில் சரிந்துவிட்டது. இதன் விளைவாக கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. 
 
சென்னை அடையாறு பகுதியில் 3.89 மீட்டரில் இருந்த நீர் மட்டம் 6.75 ஆகவும், பெருங்குடியில் 4.35 மீட்டரில் இருந்து 6.96 ஆகவும், ராயபுரத்தில் 4.26 மீட்டரில் இருந்து 7.65 ஆகவும், திருவெற்றியூரில் 3.46 மீட்டராக இருந்த நீர் மட்டம் 4.93 மீட்டராக சரிந்துள்ளது. 
மேலும், மணலியில் 2.81ல் இருந்து 5.14 ஆகவும், மாதவரத்தில் 3.85 மீட்டரில் இருந்து 6.42 ஆகவும், தண்டையார்பேட்டையில 3.84 இருந்து 7.51 ஆகவும், திருவிக நகரில் 2.71 இருந்து 7.23 ஆகவும், அம்பத்தூரில் 4.71 இருந்து 7.98 ஆகவும் உள்ளது. 
 
அதேபோல், அண்ணா நகரில் 3.82 மீட்டரில் இருந்து 6.44 ஆகவும், தேனாம்பேட்டையில் 3.77ல் இருந்து 6.49 ஆகவும், கோடம்பாக்கத்தில் 4.01ல் இருந்து 7.01ஆகவும், வளசரவாக்கத்தில் 3.88 மீட்டர் என்ற அளவில் இருந்த நிலத்தடி நீர் 6.92 என்ற அளவிற்கு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments