Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போ மகளிர் உரிமைத்தொகை? - உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (10:25 IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தொகை அனுப்புவது பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.


 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் மகளிர்க்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆண்டு அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் பலர் தங்களுக்கு தகுதி இருந்தும் உதவித்தொகை கிடைக்காததாக கூறி வந்த நிலையில், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆனால் இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.

 

இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் விளக்கமளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். கூடுமானவரை தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments