Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே: உதயநிதி டுவிட்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:02 IST)
நீட் தேர்வு என்பது துரோகமும் சூழ்ச்சியும் மட்டுமே என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
நீட்தேர்வு நேற்று முன்தினம் நடந்த நிலையில் நீட் தேர்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்
 
நீட் தேர்வு எழுதிய அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு தற்கொலைகளுக்கும் அரசியல்வாதிகளே காரணம் என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கனிமொழி தற்கொலை குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments