Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி: பாமகவினர் தடுத்ததால் பரபரப்பு

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:06 IST)
நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நேற்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்தது என்பதும் அரசியல் தலைவர்கள் நீட்தேர்வு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து விக்னேஷ் மறைவுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த நிலையில் பாமக தனது தரப்பிலிருந்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தது. மேலும் நேரில் பாமக தலைவர்கள் விக்னேஷ் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதிக்கு அந்த பகுதியில் இருந்த பாமகவினர் அனுமதி மறுத்தனர். இதனால் அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் திமுக- பாமகவினர் இடையேமோதல் ஏற்பட்டது இதனையடுத்து அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments