விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி: பாமகவினர் தடுத்ததால் பரபரப்பு

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:06 IST)
நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நேற்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் செய்தது என்பதும் அரசியல் தலைவர்கள் நீட்தேர்வு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து விக்னேஷ் மறைவுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விக்னேஷ் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்த நிலையில் பாமக தனது தரப்பிலிருந்து ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தது. மேலும் நேரில் பாமக தலைவர்கள் விக்னேஷ் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதிக்கு அந்த பகுதியில் இருந்த பாமகவினர் அனுமதி மறுத்தனர். இதனால் அரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தில் திமுக- பாமகவினர் இடையேமோதல் ஏற்பட்டது இதனையடுத்து அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments